இலங்கை செய்தி

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு!

  • February 26, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் உட்பட்ட குழுவினர் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் இன்று (26) வழிபாட்டில் ஈடுபட்டனர். பொலன்னறுவையில் இருந்து உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்திற்கு வந்திரங்கிய சுவாமிகள் உட்பட்ட குழுவினரை நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர வரவேற்றார். அங்கிருந்து வாகன பேரணி மூலமாக சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுவாமி அழைத்து வரப்பட்டார். ஆலயத்தில் நிர்வாக […]

இலங்கை செய்தி

குப்பை கொட்டுவதை அவதானிக்க வீதிகளில் கெமரா – வவுனியா பிரதேச சபை அதிரடி நடவடிக்கை

  • February 26, 2026
  • 0 Comments

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்க வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்படுவதாக பிரதேசசபையின் தலைவர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசு மற்றும் வீதியோர கழிவு அகற்றுவதில் ஏற்படுகின்ற பல்வேறு நெருக்கடிகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வவுனியா பிரதேச சபைகக்குட்பட்ட 57 இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளது. வீதியோரங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் […]

விளையாட்டு

தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி: மண்கவ்வியது மே.தீவுகள்!

  • February 26, 2026
  • 0 Comments

மேற்கிந்திய West Indies தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா South Africa அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 83 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், ஹோல்டர் – சைபர்ட் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை ஈடுபட்டனர். இதனால் அணியில் […]

இலங்கை செய்தி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் – சாவகச்சேரி நகரசபையில் நிறைவேற்றம்

  • February 26, 2026
  • 0 Comments

சாவகச்சேரி நகரசபையில், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், புதிய சட்ட வரைபிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (26.02) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு, அதன் தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் அமைந்துள்ள தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுடன் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபையும் […]

இலங்கை செய்தி

கம்பஹாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

  • February 26, 2026
  • 0 Comments

கம்பஹா – ஜா-எல வீதியின் கிரிந்திவிட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜா-எல நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிர்த்திசையில் வந்த சிறிய லொறியுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது உயிரிழந்தவர் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா செய்தி

100,000 க்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்

  • February 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் டிசம்பர் மாதம் வரையிலான ஆண்டில் 100,000 க்கும் மேற்பட்டோர் புகலிடம் கோரியுள்ளனர். இது கடந்த ஆண்டைப் போல பெரிய உயர்வாக இல்லையெனினும், சிறிது குறைவாக உள்ளது என புதிய உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிறிய படகுகள் வழியாக பிரித்தானியாவுக்குகு வந்தவர்கள் சுமார் 41,000 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13% அதிகரிப்பு, ஆனால் 2022 ஆம் ஆண்டில் இல் ஏற்பட்ட உச்சத்தை விட 9% குறைவு ஆகும். பெரும்பாலானவர்களின் தேசிய […]

இலங்கை

யானையின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி விவசாயி!!

  • February 26, 2026
  • 0 Comments

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர பகுதியிலுள்ள வீதியில் யானை தாக்கியதில் அப்பாவி விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியில் வசித்து வரும் கித்சிறி விஜேயபிரியந்த(59வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா (26) பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , யானை தாக்குதலுக்கு உள்ளான நபர் எரிபொருள் எடுப்பதற்காக மோட்டார் […]

இலங்கை செய்தி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் உத்தரவு

  • February 26, 2026
  • 0 Comments

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16 ஆவது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் திட்டங்கள் உள்ளதாகவும் அந்த அனைத்து நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை

  • February 26, 2026
  • 0 Comments

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’ பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை (27) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் […]

இலங்கை செய்தி

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – மட்டக்களப்பில் நாளை மறுதினம் மாபெரும் போராட்டம்

  • February 26, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார். இந்த போராட்டத்தை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நாளை மறுதினம் முன்னெடுக்கப்பட்ட தீர்மானித்துள்ளதாக கூறிய அவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோரத்தை உணர்ந்தவர்களாக இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான […]

error: Content is protected !!