செய்தி விளையாட்டு

டி20 உலகக்கிண்ணத்திற்கான இத்தாலி அணி அறிவிப்பு

  • January 18, 2026
  • 0 Comments

ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் முறையாகப் பங்கேற்கும் இத்தாலி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பெப்ரவரி 7-ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவில் தொடங்கவுள்ள 20 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டத் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இத்தாலி அணியை வழிநடத்தும் பொறுப்பு, தென்னாபிரிக்காவின் முன்னாள் ஹொக்கி வீரரான வெய்ன் மேட்சன் (Wayne Madsen) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தாலி அணி தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவுஸ்திரேலிய […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மீண்டும் குறையும் வெப்பநிலை – பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை

  • January 18, 2026
  • 0 Comments

இந்த மாத இறுதியில் பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மீண்டும் குறையக்கூடும் என்பதால் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். வானிலை அலுவலகத்தின் தகவலின்படி, இந்த வார இறுதியில் வெப்பநிலை பெரும்பாலும் சாதாரண அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 6 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சில பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கும் மழை, வடக்கு […]

உலகம்

12 மணிநேர போராட்டம் : 06 பேர் மரணம் – பாகிஸ்தானில் பற்றி எரியும் வணிக வளாகம்!

  • January 18, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் – கராச்சியில் உள்ள வணிக கட்டிடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று  இரவு 10 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தால் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க 12 மணிநேரமாக போராடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இன்று காலை நிலவரப்படி, தீயில் சுமார் 30 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழத் தொடங்கியுள்ளதாகவும், மீட்பு அதிகாரிகள் […]

ஐரோப்பா செய்தி

சீன தூதரக அனுமதிக்கு எதிராக போராட்டம்- அரசு முடிவுக்காக காத்திருக்கும் லண்டன்

  • January 18, 2026
  • 0 Comments

உளவு பார்க்கப்படும் என்ற கவலைகளுக்கிடையே, லண்டனில் சீனா அமைக்க திட்டமிட்டுள்ள ‘ தூதரகம்’ தொடர்பாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை என சீன தூதரகம் மறுத்துள்ளது. லண்டனில் மிகப் பெரிய புதிய தூதரகத்தை கட்ட சீனாவுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து, எப்போது வேண்டுமானாலும் அரசு முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த தூதரகம் உளவு […]

உலகம்

சிரியாவில் மற்றொரு சுற்று தாக்குதல் – அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தலைவர் மரணம்!

  • January 18, 2026
  • 0 Comments

வடமேற்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய “அனுபவம் வாய்ந்த” தலைவரான பிலால் ஹசன் அல்-ஜாசிம் (Bilal Hasan al-Jasim)  கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தினர் இன்று அறிவித்துள்ளனர். டிசம்பர் 13 அன்று நடந்த தாக்குதலுடன் அல்-ஜாசிம் “நேரடியாக தொடர்புடையவர் எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. டிசம்பர் மாதம் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கப் படைகள்  மூன்றாவது சுற்று பதிலடி நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அமெரிக்கப் படைகளை குறிவைக்கும் பயங்கரவாதிகளைத் துரத்துவதில் அந்நாடு கொண்டிருக்கும் உறுதியை […]

ஐரோப்பா செய்தி

பத்திரிகைகளுக்கு எதிரான ஹாரியின் சட்டப் போராட்டம் – லண்டன் நீதிமன்றில் வழக்கு

  • January 18, 2026
  • 0 Comments

சசெக்ஸ் டியூக் இளவரசர் ஹாரி மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். சில செய்தித்தாள்கள் தகவல்களைச் சேகரிக்க சட்டவிரோத முறைகளை பயன்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். டெய்லி மெயில் பத்திரிகையின் வெளியீட்டாளர் நிறுவனமான அசோசியேட்டட் செய்தி தாள் நிறுவனத்திற்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால் இந்த முறை, இளவரசர் ஹாரியின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. முன்பு போல அனைத்தையும் எதிர்த்து போராடாமல், தனது குடும்பத்தினருடன் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்துவது பற்றியும் […]

இலங்கை செய்தி

நாடு தழுவிய சோதனை நடவடிக்கை ; 882 பேர் கைது

  • January 18, 2026
  • 0 Comments

“முடு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நாளாந்த சோதனை நடவடிக்கையின்போது நேற்று 882 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 9 சந்தேக நபர்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின்போது 400 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 11 கிராம் ஐஸ் மற்றும் 500 கிராம் கொக்கைன் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை செய்தி

கொழும்பு – புத்தளம் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்

  • January 18, 2026
  • 0 Comments

கடந்த 53 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நீர்கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் சேவைகள் நாளை 19ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. பத்துளுஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் சுமார் 200 அடிக்கும் அதிகமான ரயில் பாதை முற்றாகச் சேதமடைந்திருந்தது. ரயில்வே திணைக்கள ஊழியர்களின் தொடர்ச்சியான சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, இந்தப் பராமரிப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதற்கமைய, நாளை காலை முதல் வழமை போன்று பாலவி வரை அலுவலக ரயில்கள் இயக்கப்படும் […]

ஐரோப்பா

ஆஸ்திரியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 08 பேர் உயிரிழப்பு!

  • January 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரியாவில் (Austria) தனித்தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 08 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் பனிச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய ஆஸ்திரியாவில் உள்ள ஸ்டைரியாவின் (Styria) முர்டல் (Murtal) மாவட்டத்தில் ஏழு பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபட்டது. அவர்களில் 03 பேர் பனிச்சரிவில் சிக்கி முழுமையாக புதையுண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு பணியாளர்கள் பெரும் போராட்டத்தின் பின் அவர்களை மீட்ட போதும் குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக […]

இலங்கை செய்தி

தைப்பொங்கலை வட மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்றத் திட்டம்: மன்னாரில் ஆளுநர் அறிவிப்பு

  • January 18, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணப் பொங்கல் விழா – 2026’ வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் முன்றலில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய ‘புதிரெடுத்தல்’ மற்றும் பொங்கலிடும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். அங்கு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் கல்வி, சுற்றுலா மற்றும் விவசாய அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தைப்பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார். […]

error: Content is protected !!