இலங்கை

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் – தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

  • December 15, 2025
  • 0 Comments

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளை பிற்பகல் 02 மணி வரை நீடித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது. கைத்தொழில் பேரிடர் ஆதரவு மையம் இன்றுவரை 18,321 விசாரணைகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சின் தகவல்படி, கைத்தொழில் அமைச்சின் உற்பத்தித் துறையின் கீழ் உள்ள 6,362 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 7,510 நுண் நிறுவனங்கள், 6,256 சிறிய அளவிலான நிறுவனங்கள், 3,998 நடுத்தர அளவிலான நிறுவனங்கள், மற்றும் 557 […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கி சூடு – தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

  • December 15, 2025
  • 0 Comments

கடந்த வாரம் சிட்னியின்(Sydney) பாண்டியில்(Bondi) பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இங்கிலாந்து(England) கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்(Michael Vaughan) இருந்ததாக தெரிவித்துள்ளார். மைக்கேல் வாகன் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ்(Ashes) தொடர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் வாகன், தானும் தனது குடும்பத்தினரும் “தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்” இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த அனுபவத்தை “பயங்கரம்” என்று […]

உலகம் செய்தி

போண்டி (Bondi) துப்பாக்கிச்சூடு – சட்டங்களை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா! காணொளி இணைப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற  போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த யூத கொண்டாட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரிகளில் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். மற்றொரு நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளார். சந்தேக நபர்களின் பெயர்களை காவல்துறையினர் வெளியிடவில்லை, ஆனால் தேசிய ஒளிபரப்பாளரான ஏபிசி மற்றும் […]

ஐரோப்பா செய்தி

இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும் மருத்தவர்கள் – சிக்கலில் சுகாதாரத்துறை!

  • December 15, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள குடியிருப்பு மருத்துவர்கள் அரசாங்கத்தின் சமீபத்திய சலுகையை நிராகரித்துள்ள நிலையில் வரும் 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 83 சதவீத வாக்குப்பதிவில் 65 சதவீதமான  மருத்துவர்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு சாதகமாக வாக்களித்துள்ளதாக  மருத்துவ சங்கம் (BMA) உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் சூப்பர் புளூ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற இந்த காலக்கட்டத்தில் மருத்துவர்களின் வெலைநிறுத்தமானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என NHS அறக்கட்டளை எச்சரித்துள்ளது. வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

  • December 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: சக் க்ராலி(Zak Crawley), பென் டக்கெட்(Ben Duckett), ஓலி போப்(Ollie Pope), ஜோ ரூட்(Joe Root), ஹரி ப்ரூக்(Harry Brook), பென் ஸ்டோக்ஸ்(Ben Stokes), ஜேமி ஸ்மித்(Jamie Smith), வில் […]

அரசியல் இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை தோல்வி!

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இதனை மாற்றியமைத்து தற்காலத்திற்கேற்றாற் போல் இடர் முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “ பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன. அதனை மீள கட்டியெழுப்ப நாம் கை கொடுக்க வேண்டும். மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளது. களப் பயணங்களை மேற்கொண்டால் இந்த நிலையை புரிந்து […]

உலகம்

பிரசவ செலவை ஈடுகட்டும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா!

  • December 15, 2025
  • 0 Comments

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய மகப்பேறு மற்றும் அதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் உட்பட அனைத்து பிரசவ செலவுகளையும் ஈடுகட்டும் வகையில் ஒரு விரிவான கொள்கையை அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து மூன்றாம் நிலை மருத்துவமனைகளும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரசவத்தின் போது எபிடூரல் மயக்க மருந்தை (epidural anaesthesia) வழங்க வேண்டும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்குள் இரண்டாம் நிலை […]

அரசியல் இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குவது குறித்து ஆராய்வு!

  • December 15, 2025
  • 0 Comments

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது. பல்தரப்பு அணுகுமுறை மூலம் தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக, NBRO உட்பட தொடர்புடைய தரப்பினர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

பொண்டி துப்பாக்கிச்சூடு – ஜனாதிபதி கண்டனம்

  • December 15, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் , இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைப் பதிவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என ஜனாதிபதி மேலும் கூறினார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் நேற்றைய […]

இலங்கை

இலங்கை இராணுவத்தினரின் நெகிழ்ச்சியான செயல்!

  • December 15, 2025
  • 0 Comments

பேரிடர் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட  300,000 ரொக்கம் மற்றும் சுமார்   5 மில்லியன் ரூபாய்  மதிப்புள்ள தங்க நகைகளை இலங்கை இராணுவ வீரர்கள் அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது. ஹங்குரான்கெத்த பிரதேச செயலகப் பிரிவுக்குள் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளின் போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிலச்சரிவால் முற்றிலுமாக அழிவடைந்த   வீட்டின் இடிபாடுகளில் இருந்து  பணம் மற்றும் நகை என்பன  மீட்கப்பட்டதாகவும் அவை பாதுகாப்பாக உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் […]

error: Content is protected !!