அரசியல் இலங்கை செய்தி

மனோவின் யோசனைக்கு ராதா போர்க்கொடி: மலையகத்தைவிட்டு வெளியேற மறுப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

“மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று குடியேறுவதற்கு தயாரில்லை. மலையகம்தான் எங்களின் தாயகம்.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணி வழங்கப்படாவிட்டால், அவர்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதற்கு தயார் என தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் அறிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பதிவொன்றை பகிர்ந்தே சுமந்திரன் மேற்படி அறிவிப்பை விடுத்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – இரண்டாம் நாள் முடிவில் 158 ஓட்டங்கள் பின்னிலையில் இங்கிலாந்து

  • December 18, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில், அலெக்ஸ் கரே(Alex Carey) 106 ஓட்டங்களும் உஸ்மான் கவாஜா(Usman […]

உலகம் செய்தி

ஆயுதங்களை வழங்குவதால் தைவானின் அழிந்த விதியை காப்பாற்ற முடியாது!

  • December 18, 2025
  • 0 Comments

தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா 11 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் சீனா எதிர்வினையாற்றியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் (Guo Jiakun), தைவான் சுதந்திரத்திற்கு ஆயுதம் வழங்கி உதவுவதன் மூலம் அமெரிக்கா தனக்கு தானே தீவைத்துக்கொள்ளும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார். இதனால் தைவானின் அழிந்த விதியைக் காப்பாற்ற முடியாது எனவும் இந்த நடவடிக்கையானது தைவான் ஜலசந்தியை இராணுவ மோதல் மற்றும் போரின் ஆபத்தான சூழ்நிலையை நோக்கித் தள்ளுவதை […]

இலங்கை செய்தி

திருகோணமலை உட்பட பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

  • December 18, 2025
  • 0 Comments

மகாவெலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக, அடுத்த 48 மணிநேரங்களில் மகாவெலி கங்கைக்கரையோரமாக உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளது. இதன் கீழ் பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்கும்: கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ, மற்றும் திம்புலாகல. மேலும், மட்டக்களப்பு–பொலன்னறுவை பிரதான வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்லும் பாதை, மற்றும் […]

இலங்கை செய்தி

யாழ் மாவட்ட வெள்ள நிவாரணத்திற்காக 365.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு: அரசாங்க அதிபர் தகவல்

  • December 18, 2025
  • 0 Comments

ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று மாபெரும் மக்கள் நடமாடும் சேவை நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தீவக மக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நகர்ப்புறங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் நோக்கில் இச்சேவை முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 365.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கும் போது கிராம மட்ட உத்தியோகத்தர்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் சிக்குன்குன்யா வைரஸ் – அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

இலங்கைக்கு செல்லும் அனைத்து பயணிகளும் மேம்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) எச்சரித்துள்ளது. டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவால் இலங்கையின் உட்கட்டமைப்பும் சுகாதார சேவைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயணிகள் நுளம்பு கட்டுப்பாடு, தூய்மை, சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றல், மற்றும் தேவையெனில் உடனடியாக மருத்துவ உதவிகளை அணுகுதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்க […]

இந்தியா உலகம்

இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

  • December 18, 2025
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் முன்னிலையில், இந்தியா – ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் சென்றிருந்தார். இந்நிலையில், இன்று இரு தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், ஓமனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 98.08% பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்று, இந்தியாவுக்கு ஒமன் ஏற்றுமதி செய்யும் […]

இலங்கை செய்தி

08 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

மகாவலி ஆற்றின் சில நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் அடுத்த 48 மணித்தியாலங்களில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மட்டக்களப்பு பொலன்னறுவை வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விஹாரைக்கான […]

உலகம்

பசிபிக் கடலில் அமெரிக்கா வான் தாக்குதல் – 8 பேர் பலி

  • December 18, 2025
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக […]

இலங்கை செய்தி

எல்லைப்புற கிராமங்கள் குறித்து வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் எல்லைப்புறங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் எவற்றையும் விடுத்துவிடாது, அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் முழுமையான திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற, 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்படி: விவசாயத் திணைக்களத்திற்கு 619 மில்லியன் ரூபாவும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு 604 மில்லியன் ரூபாவும், கால்நடைத் துறைக்கு […]

error: Content is protected !!