ஆசியா

பிலிப்பைன்ஸை தாக்கிய மற்றொரு சூறாவளி – நால்வர் பலி, பலர் இடப்பெயர்வு!

  • September 26, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸை தாக்கிய மற்றொரு புயலின் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன் எராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆசியாவை அச்சுறுத்தும் பசிபிக் பெருங்கடலில் இருந்து அடுத்தடுத்து வந்த புயல்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரகாசா புயல் காரணமாக தைவான் மற்றும் பிலிப்பைன்ஸில் ஏறக்குறைய 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புயல் காரணமாக கிழக்கு சமர் மாகாணத்தில் உள்ள சான் பாலிகார்போ நகரில் மணிக்கு 110 கிமீ (68 மைல்) வேகத்தில் காற்று வீசியதால் புவாலோய் கரையைக் கடந்தது. நகரங்கள் மற்றும் […]

ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

சிட்னியிலிருந்து நியூசிலாந்து சென்ற விமானத்தில் பதற்றம் – மேடே அழைப்பு விடுத்த விமானி

  • September 26, 2025
  • 0 Comments

அவசரநிலை காரணமாக சிட்னியில் இருந்து நியூசிலாந்து சென்ற போயிங் 737 குவாண்டாஸ் விமானத்தில் மேடே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமானத்தில் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் விமானி மேடே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விமானத்தின் சரக்கு பகுதியில் உள்ள தீ எச்சரிக்கை ஒளிர, இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்று கருதி விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த சூழ்நிலை காரணமாக ஒக்லாந்து விமான நிலையத்தில் பல அவசர சேவைகள் தயார் நிலையில் இருந்தன, மேலும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரித்தானியமக்கள்!

  • September 26, 2025
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு  மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்படி க 400,000 க்கும் மேற்பட்டோர் கையொப்பம் இட்டு ஒரு மனுவை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்கு பெரும்பான்மையான பொதுமக்கள் ஆதரவளிப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டினாலும், தனியுரிமை மற்றும் சாத்தியமான தரவு மீறல்கள் குறித்த அச்சங்களை விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர். ஏறக்குறைய 50000 பேர் ஒரு மணி நேரத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் இனி மொழி தடை இல்லை

  • September 26, 2025
  • 0 Comments

வாட்ஸ்அப் தனது பயனர்களின் வசதிக்காக புதிய மற்றும் பயனுள்ள அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் பல பில்லியன் மக்கள் வாட்ஸ்அப்-பைப் பயன்படுத்தி வரும் நிலையில், மொழி மற்றும் கலாசாரத் தடைகளை நீக்கும் நோக்கில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், கடந்த வியாழக்கிழமை அன்று, உடனுக்குடன் செய்திகளை மொழிபெயர்க்கும் (Live Translate) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஒரு பயனர் வேறு மொழியில் வரும் செய்தியை எளிதாக மொழிபெயர்த்துப் புரிந்துகொள்ள முடியும். இந்த வசதியை […]

உலகம் செய்தி

மெக்சிகோவில் கைதான பெண்ணால் சிக்கிய மிகப்பெரிய கடத்தல் கும்பல்

  • September 26, 2025
  • 0 Comments

வடக்கு மெக்சிகோவில் குழந்தைகள் மற்றும் உறுப்புகளை விற்பனை செய்வதில் ஈடுபட்ட ‘லா டயாப்லா’ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், பெரிய அளவிலான கடத்தல் நடவடிக்கை வெளிப்பட்டுள்ளது. அமெரிக்க-மெக்சிகன் கூட்டு நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார். மார்த்தா அலிசியா மெண்டஸ் அகுய்லர் என்ற இந்த கடத்தல்காரர், மெக்சிகோவில் உள்ள ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்லின் உறுப்பினர். ஏழை, கர்ப்பிணிப் பெண்களை தொலைதூர கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோத சிசேரியன் செய்து, குழந்தைகளை எடுத்துச் சென்று கொல்பவராக […]

வட அமெரிக்கா

கனடாவில் பொதுச் சேவையில் பணிப்புரியும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

  • September 26, 2025
  • 0 Comments

கனடாவில் 2024 மற்றும் 2025 க்கு இடையில் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கனடா செயலகத்தின் கருவூல வாரியத்தால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் கசிந்துள்ளது. மார்ச் 2024 இறுதியில் 9,120 மாணவர்கள் மத்திய பொது சேவையில் பணிபுரிந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  ஒரு வருடம் கழித்து, மார்ச் 2025 இல், அந்த எண்ணிக்கை 7,370 ஆகக் குறைந்துள்ளது. CRA இன் செய்தித் தொடர்பாளர் எட்டியென் பிரம், தி கனடியன் […]

இலங்கை செய்தி

இலங்கையின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • September 26, 2025
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10 மணி வரை செல்லுபடியாகும். அதன்படி, எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள் காலே மாவட்டம் – நாகொட – எல்பிட்டிய – பத்தேகம – யக்கலமுல்ல […]

விளையாட்டு

பாகிஸ்தான் வாரியத்தின் முறைப்பாட்டால் சூர்யகுமாருக்கு அபராதம்?

  • September 26, 2025
  • 0 Comments

ICCயிடம் பாகிஸ்தான் அளித்த முறைப்பாடு தொடர்பாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீவிரவாததுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுடன் இருநாட்டுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று BCCI தெரிவித்தது. ஆனால் ICCதொடரில் மட்டும் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. துபாயில் நடந்த ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற பிறகு இந்திய அணி வீரர்கள், பாக். வீரர்களுடன் கைக்குலுக்காமல் சென்றனர். இது சர்ச்சையை […]

செய்தி

தனக்கு எதிராக 3 முறை நாசவேலை – கடும் கோபத்தில் – டிரம்ப் விசாரணைக்கு உத்தரவு

  • September 26, 2025
  • 0 Comments

ஐ.நா. வருகையின் போது தனக்கு எதிராக 3 முறை நாசவேலை நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்திய நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு உண்மையான அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது. முதலாவதாக உரையாற்ற மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் செயலிழந்துவிட்டது. மெலனியாவும் நானும் படிகளின் கூர்மையான விளிம்புகளில் முன்னோக்கி விழவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் கைப்பிடியை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 8000 குழந்தைகளின் தரவுகளை ஊடுறுவிய ஹேக்கர்கள்!

  • September 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் மழலையர் பாடசாலை ஒன்றில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் புகைப்படங்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த புகைப்படங்கள் மற்றும் உணர்திறன் வாய்ந்த தரவுகள் டார்க்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 8,000 குழந்தைகளின் விவரங்களை சைபர் குற்றவாளிகள் குழு அணுகியுள்ளது, அவர்கள் இந்த முக்கியமான தகவல்களைப் பயன்படுத்தி கிடோ நர்சரி சங்கிலியிலிருந்து ஒரு தொகை பணத்தை  கோருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மையம் லண்டன், அமெரிக்கா மற்றும் இந்தியா முழுவதும் தளங்களைக் கொண்டுள்ளது. ஹேக்கர்கள் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் பற்றிய தகவல்களை […]

error: Content is protected !!