ஆஸ்திரேலியா செய்தி

நியூசிலாந்தில் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லாத காதலன் – காதலியின் விபரீத செயல்

  • June 23, 2024
  • 0 Comments

நியூசிலாந்தில் காதலன் தம்மை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லவில்லை என காதலி வழக்கு தாக்கல் செய்துள்ளார். எனினும் நீதிமன்றம் வழக்கை நிராகரித்துள்ளது. CL என்று அழைக்கப்பட்ட பெண் நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அங்கு அவர் ஒரு கச்சேரிக்குச் செல்லவிருந்தார். விமான நிலையத்தில் தம்மை விடும்படி அவர் காதலனைக் கேட்டுக்கொண்டார். காதலன் அதனை மறுத்துவிட்டார். இதனால் CL விமான நிலையத்துக்கு நேரத்துக்குச் செல்ல முடியாமல் பயணம் தாமதமடைந்தது. காதலனின் செயலால் தமக்கு நிதி இழப்பு […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் ரயிலில் ஏற்பட்ட விபரீதம்- விரல்களை இழந்த நபர்

  • June 23, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கட்டானா எனப்படும் ஜப்பானிய வாள் ஒன்றை திருடும் முயற்சி இடம்பெற்றுள்ளது. நேற்று காலை 6 மணி அளவில் Gare de l’Est ரயில் நிலையத்தில் குறித்த வாளுடன் நபர் ஒருவர் பயணித்துள்ளார். அதனை இரு திருடர்கள் திருட முற்பட்டுள்ளனர். இந்த திருட்டு முயற்சியின் போது இரு தரப்புக்கும் இடையே இழுபறி நிலவியது. அதையடுத்து, திருடர்கள் குறித்த நபரை வாள் ஒன்றினால் வெட்டியுள்ளனர். இதில் அவரின் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன. அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். […]

இலங்கை

இலங்கையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து : சம்பவ இடத்திலேயே இருவர் பலி!

  • June 23, 2024
  • 0 Comments

பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் – பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) காலை இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. 19 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்தமை குறிப்பிடத்தக்கது. உல்லாசப் பயணத்திற்காக இரத்தினபுரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தலாவ […]

ஐரோப்பா

நீருக்கடியில் அமைக்கப்படும் சுரங்க பாதை : இரு ஐரோப்பிய நாடுகளை 07 நிமிடங்களில் அடைய முடியும்!

  • June 23, 2024
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய சுரங்க பாதை நீருக்கடியில் பிரமாண்டமாக உருவாகிவருகிறது. இந்த திட்டத்திற்காக £6.2bn பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. ஃபெஹ்மார்ன் பெல்ட் சுரங்கப்பாதை என அழைக்கப்படுகிறது. இது உலகின் மிக நீளமான நீருக்கடியில் ரயில் போக்குவரத்தை இயக்கக்கூடிய  சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகிறது. பால்டிக் கடலின் கீழ் ஸ்காண்டிநேவியா மற்றும் மத்திய ஐரோப்பா இடையே நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த பாதையின் மூலம் தெற்கு டென்மார்க்கையும், வடக்கு ஜெர்மனியையும் வெறும் 07 நிமிடங்களில் அடைய  முடியும் எனக் கூறப்படுகிறது. அத்துடன் படகு […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய 1700 வைத்தியர்கள் – கடும் நெருக்கடியில் நோயாளிகள்

  • June 23, 2024
  • 0 Comments

இலங்கையில் நான்கு வருட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 1700 வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களில் கிட்டத்தட்ட 500 நிபுணர்கள் உள்ளனர். தரவு அறிக்கைகளின்படி 1655 வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் கடந்த நான்கு வருடங்களில் 573 வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன், 1082 வைத்தியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த வருடம் […]

செய்தி

தொழிலாளர்களுக்கான விசா நிபந்தனைகளை புதுப்பித்த ஆஸ்திரேலியா!

  • June 23, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா திறமையான தொழிலாளர்களுக்கான விசா நிபந்தனைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விசா நிபந்தனைகள் 8107, 8607 மற்றும் 8608 ஆகியவற்றில் புதிய மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் தற்காலிக வேலை விசா, தற்காலிக திறன் விசா மற்றும் திறமையான பணியமர்த்தப்பட்ட பிராந்திய விசாவை வைத்திருக்கும் தற்காலிக புலம்பெயர்ந்தோருக்கு தொழிலாளர் சந்தை இயக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தங்கள் ஸ்பான்சர் செய்யும் முதலாளியுடன் வேலை செய்வதை நிறுத்தும் இந்த […]

ஆசியா செய்தி

சிங்கப்பூர் வங்கி கட்டமைப்பிற்கு காத்திருக்கும் நெருக்கடி

  • June 23, 2024
  • 0 Comments

சிங்கப்பூரின் வங்கி கட்டமைப்பு அதிக அபாயத்தை எதிர்நோக்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பண மோசடி அபாய மதிப்பீட்டு அறிக்கையை உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் நாணய வாரியம், நிதியமைச்சு ஆகியவை வெளியிட்டன. வங்கிகள் அதிக அளவில் பரிவர்த்தனைகளைக் கையாள்வதால் அவை மோசடி அபாயத்துக்கு மேலும் இலக்காவதாக அறிக்கை தெரிவித்தது. அதிக ஆபத்துள்ள இடங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வருவதும் அதற்குக் காரணமாகும். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அபாய மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையின் கடற்பகுதிகளில் அதிக காற்று வீசும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • June 23, 2024
  • 0 Comments

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (23) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (24) காலை 7:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கசன்துறை மற்றும் புத்தளத்திலிருந்து ஹலவத்தை வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும். 60-65 ஆக அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் 300,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு

  • June 23, 2024
  • 0 Comments

பல்கேரிய தொழிலாளர் சந்தை 250,000 முதல் 300,000 வரையிலான தொழிலாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று மனிதவள நிபுணர் ஜோர்ஜி பர்வனோவ் தெரிவித்துள்ளார். இவர்களில், பருவகால வேலையாட்கள் பற்றாக்குறையாக 70,000 வெற்றிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வேலைவாய்ப்பு கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவின் உறுப்பினரான பர்வனோவ், பல்கேரியா மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான ஒதுக்கீட்டை நிறுவ வேண்டும் என்று பரிந்துரைத்தார். இருப்பினும், மூன்றாம் நாடுகளிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு முன் பல்கேரியா அதன் அனைத்து உள்ளூர் தொழிலாளர் வளங்களையும் ஆராய்ந்ததை […]

ஐரோப்பா

இங்கிலாந்து மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

  • June 23, 2024
  • 0 Comments

இங்கிலாந்தின்  சில பகுதிகளில் வெப்பநிலை 30C ஐத் தொடும் என்பதால் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் வெப்ப சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாட்டின் ஒரு பகுதியைத் தவிர மற்ற அனைத்தையும் உள்ளடக்கியது. வெப்ப அலையின் விளைவாக சுகாதார சேவைகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. யுகே ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (யுகேஹெச்எஸ்ஏ) மற்றும் வானிலை அலுவலகம் இணைந்து வெளியிட்ட எச்சரிக்கை திங்கள் காலை முதல் அமலுக்கு வந்து வியாழன் பிற்பகல் வரை இருக்கும். […]

error: Content is protected !!