இலங்கை

இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் – 137 இந்தியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • June 29, 2024
  • 0 Comments

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார். இதேவேளை, நேற்று (28) வரை ஆன்லைனில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வீடு வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

  • June 29, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் இவ்வாண்டின் முதல் கால் ஆண்டில் வீட்டு விலைகளில் மீண்டும் குறைந்துள்ளது என ஜெர்மனியின் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியில் 2024 இன் முதல் காலாண்டில் குடியிருப்பு சொத்துக்களின் விலை வீழ்ச்சியடைந்து. அது தொடர்ந்தும் கீழ் நோக்கிச் செல்கிறது. ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 2024 முதல் மூன்று மாதங்களில் உள்நாட்டு சொத்து விலைகள் மேலும் சரிவதைக் காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடும்போது ஜனவரி முதல் மார்ச் வரையிலான சொத்து […]

ஆசியா

ஆசியாவின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு காரணமாகிய இந்தியர்கள்

  • June 29, 2024
  • 0 Comments

ஆசிய நாடுகளுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாகவும், சில நாடுகளில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையும் முக்கிய காரணமாக இருந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கும் முறையை நடைமுறைப்படுத்துவதில் தாய்லாந்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். இந்திய சுற்றுலாப் பயணிகளின் கணிசமான வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தும் போதே தைவான் பிரதி வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்தவொரு முறையான முடிவையும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒரே வாரத்தில் சிக்கிய 8600 சாரதிகள் – கண்கானிக்கும் கமராக்கள்

  • June 29, 2024
  • 0 Comments

தெற்கு ஆஸ்திரேலியாவில் கையடக்க தொலைபேசி பயன்படுத்தி ஓட்டுனர் கண்டறிதல் கமராக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முதல் வாரத்தில் 8600 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். கடந்த 19ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் நாளொன்றுக்கு 1200க்கும் அதிகமான சாரதிகள் தமது தொலைபேசிகளை உபயோகித்து வாகனம் ஓட்டியதாக இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலைமை பொறுப்பற்ற நடத்தை எனவும், ஸ்டியரிங் வீலில் கைகளை வைத்து தொலைபேசிகளை பயன்படுத்துவது சாரதிகளின் கவனக்குறைவான நிலை எனவும் பொலிஸ் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்க தொலைபேசி கமராவை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய விடயங்கள்

  • June 29, 2024
  • 0 Comments

ஸ்மார்ட் போன் கேமரா அழகாக இருக்கும். ஆனால் அதேசமயம் மென்மையானதாக இருக்கும். ஆனால் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்கள் போன் கேமராவை சேதப்படுத்தலாம். லேசர் லைட்-ஐ படம் எடுக்க கூடாது இசை கச்சேரிகள், பொழுதுபோக்கு போன்ற நிகழ்ச்சிகளில் அதிக தீவிரம் கொண்ட லேசர் விளக்குகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றை உங்கள் ஸ்மார்ட்ஃபோனைக் கொண்டு படம்பிடிப்பது கேமரா சென்சாரை நிரந்தரமாக சேதப்படுத்தலாம். லேசர் விளக்குகளின் அதிக ஆற்றல் காரணமாக, லென்ஸ் அமைப்பு மற்றும் சென்சார் இரண்டும் பாதிக்கிறது. உங்கள் […]

இலங்கை

ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் கடன்களை முழுமையாக இரத்து செய்யுமாறு கோரும் ரணில்

  • June 29, 2024
  • 0 Comments

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொருளாதார பலம் இல்லாத ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிவாரணத்தை இலங்கை எதிர்பார்க்கவில்லை எனவும், கடனை நிர்வகித்து முன்னோக்கிச் செல்வதற்கான பலமும் விவேகமும் இலங்கைக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, காலநிலை மாற்றத்தை கையாள்வதில் பிராந்திய தலைமைத்துவத்தை எடுக்க இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்தார். மத்திய […]

செய்தி விளையாட்டு

டி20 உலகக்கோப்பை – இறுதிப் போட்டிக்கும் மழை அச்சுறுத்தல்

  • June 29, 2024
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் திகதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் நிலையில், அதில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. போட்டி […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் துணை இன்றி 14 குட்டிகளை போட்ட பாம்பு – குழப்பத்தில் ஆய்வாளர்கள்

  • June 29, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ஆண் என்று எண்ணப்பட்ட பாம்பு ஒன்று 14 குட்டிகளைப் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. போர்ட்ஸ்மௌத் நகரில் City of Portsmouth கல்லூரியில் வளர்க்கப்படும் பாம்பு முதலில் ஆண் என்று நம்பப்பட்டது. குட்டி போட்ட பிறகே அது பெண் என்று தெரியவந்தது. பாம்பு எந்தத் துணையுமின்றிக் குட்டிகளை ஈன்றெடுத்ததாகக் கூறப்பட்டது. கடந்த 9 ஆண்டாகப் பாம்பு, ஆண் துணையுடன் இருந்ததில்லை என்று கல்லூரியின் வனவிலங்குப் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளனர். பாம்புகள் துணையின்றிக் குட்டி போடுவது மிகவும் அரிதான […]

ஆசியா

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு பில்லிசூனியம் வைக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி

  • June 29, 2024
  • 0 Comments

மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) […]

ஆசியா

சிங்கப்பூர் மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி – அதிகரிக்கும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள்

  • June 29, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் எதிர்வரும் 3 மாங்களுக்கு மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் எரிசக்திச் செலவால் கட்டணங்கள் உயர்கின்றன. இந்தக் காலாண்டைவிட அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் சராசரியாகக் கிலோவாட்  தெரிவித்தது. அதாவது நான்கறைக் கழக வீட்டின் மாதாந்திரச் சராசரி மின்சாரக் கட்டணம் 35 காசு அதிகரிக்கும். எரிவாயுக் கட்டணம் கிலோவாட் மணிக்கு 0.3 காசு உயர்ந்து 23.42 காசாகும் என்று எரிசக்திச் சேவை வழங்கும் City Energy நிறுவனம் தெரிவித்தது.

error: Content is protected !!