கனடாவில் இருந்து யாழப்பாணம் வந்தவர் திடீரென உயிரிழப்பு
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று (26) சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதகலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றையதினம் (25) மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்ததுஃ […]













