இலங்கை

கிளிநொச்சியில் ஏற்பட்ட பரபரப்பு – வன்முறை கும்பல் அட்டகாசம் – ஐவர் காயம்

  • September 28, 2023
  • 0 Comments

கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் வெளிநாட்டு பிரஜையின் வீட்டிற்குள் குழுவொன்று நுளைந்து சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை இந்த குழு தாக்கியுள்ளது. சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் வெட்டியதாகவும், தடுத்த பெண்ணுக்கும் தாக்கியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் இருவரும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

iphone 15 இல் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள் – அதிருப்தியில் பயனர்கள்

  • September 28, 2023
  • 0 Comments

சமீபத்தில் வெளியான iphone 15 சீரியஸ் மாடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த பதிவில் அந்த மாடலில் ஏற்பட்டுள்ள முக்கியமான மூன்று பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம். முதல் பிரச்சனையாக ஐபோன் 15ல் Setup Bug இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ஏற்கனவே ஒரு ஐபோன் மாடல் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதில் உள்ள தரவுகளை நேரடியாக ஐபோன் 15க்கு மாற்றும்போது, சாதனம் அப்படியே பிரீஸ் ஆகிவிடும் சிக்கலை சந்திக்கிறது. அதாவது கொஞ்ச நேரத்திற்கு சாதனம் வேலை செய்யாமல் […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மி.மீ. 100 வரை பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது […]

ஐரோப்பா

பிரான்ஸில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் செய்த செயல்

  • September 28, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால் 51 வயதுடைய பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. Toulouse நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. உள்ளூர் பொலிஸ்நிலையம் ஒன்றுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், விரைந்து வருமாறும் தெரிவித்துள்ளார். அதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். அங்குள்ள வீடொன்றில், இரத்த வெள்ளத்தில் 51 வயதுடைய […]

ஐரோப்பா

ஜெர்மனிக்குள் நுழைந்த 2 லட்சம் அகதிகள் – இந்தியர்களுக்கு நெருக்கடி

  • September 28, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டுக்குள் இந்த ஆண்டில் இதுவரை 2 லட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் வந்து இருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. இதனால் ஜெர்மனி நாடு அகதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இதுவரை மொத்தமாக 220116 அகதிகள் ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகத விண்ணப்பம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது 2015 மற்றும 2016 ஆம் ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்தவர்களுடைய எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தெரிவந்துள்ளது. இந்த அகதிகளின் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலைகளில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் 02 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாரத்திற்கு ஒரு கருப்பொருளை தெரிவு செய்து பாடசாலைகளில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பா செய்தி

நாஜி கௌரவிப்பு சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

  • September 27, 2023
  • 0 Comments

இரண்டாம் உலகப் போரின்போது நாஜி பிரிவில் பணியாற்றிய ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் மரியாதை அளிக்கப்பட்டதையடுத்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரினார், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பிரெஞ்சு மொழியில் ட்ரூடோ, “இந்த அறையில் இருந்த அனைவரின் சார்பாக, வெள்ளிக்கிழமை நடந்ததற்கு எனது மிகவும் நேர்மையான மன்னிப்பை வழங்க விரும்புகிறேன். 98 வயதான Yaroslav Hunka, கடந்த வாரம் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy கலந்துகொண்ட சிறப்பு அமர்வின் போது, ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலுக்கு எதிராக கனடாவின் தொடர்ச்சியான […]

செய்தி மத்திய கிழக்கு

சவுதியில் தகவல் தொடர்பு துறையில் செய்யப்பட்ட மிகப் பெரிய மாற்றம்

  • September 27, 2023
  • 0 Comments

சவூதி அரேபியாவில், தெரியாத எண்களை அழைப்பதில் ஏற்படும் தொந்தரவை நீக்கவும், தொலைபேசி அழைப்பு மோசடிகளைத் தடுக்கவும், பெறுநருக்கு தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கவும் அழைப்பாளரின் பெயர் மற்றும் அடையாளக் காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. சவுதி தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் (CST) அக்டோபர் 1, 2023 முதல் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பை அமைத்துள்ளது. CST, சவுதி டிஜிட்டல் ரெகுலேட்டர், மொபைல் போன்கள் மற்றும் லேண்ட்லைன்களில் அழைப்பவர்களின் பெயர் மற்றும் ஐடி பெறுநரின் […]

உலகம் செய்தி

பல நாடுகளை பின்தள்ளி சாதனை படைத்த ஆப்கானிஸ்தானின் நாணயம்

  • September 27, 2023
  • 0 Comments

தலிபான் ஆட்சிக்கு திரும்பிய பிறகு, ஆப்கானிஸ்தானில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்தது, இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் நாணயம் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளது என்று செய்தி வந்துள்ளது. இந்த காலாண்டில் ஆப்கானிஸ்தானின் நாணயமான ஆப்கானி உலகின் சிறந்த நாணயமாக உருவெடுத்துள்ளதாக ப்ளூம்பெர்க் சேகரித்த தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில், ஆப்கானியின் விலை குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பது சதவீதம் உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நாணயத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய காரணம், அது பெறும் பில்லியன் டொலர் மனிதாபிமான உதவி மற்றும் ஆசியாவின் […]

இலங்கை செய்தி

மரணச் சடங்கில் கலந்துகொள்ளாத மகிந்த!!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

  • September 27, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகவீனமுற்றுள்ளார் என்ற தகவல் தற்போது பல சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாத காரணத்தினால் இந்தச் செய்தி பரவி வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி சுகயீனம் காரணமாக இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என முகநூலில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் பரவி வரும் வதந்திகளை பொய்யாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) […]

error: Content is protected !!