தமிழ்நாடு

16வயது மாணவரை மிரட்டி உல்லாசமாக இருந்த இளம்பெண்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர், பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவருடைய பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண், தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருடைய கணவர் வெளியூரில் டிரைவராக உள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றார்.

அந்த இளம்பெண்ணும், பிளஸ்-1 மாணவரும் உறவினர்கள் ஆவர். எனவே ஒருவரது வீட்டுக்கு இன்னொருவர் செல்வதை யாரும் தவறாக நினைக்கவில்லை. இந்த நிலையில் அந்த மாணவருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சில நாட்களாக அந்த மாணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. சோர்வாக இருந்துள்ளார். யாரிடமும் சரிவர பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், அதுகுறித்து மாணவரிடம் கேட்டுள்ளனர். அப்போது மாணவர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அவர், உறவினரான அந்த இளம்பெண் கடந்த 3 மாதமாக தன்னை மிரட்டி பாலியல் உறவு கொள்வதாக தெரிவித்துள்ளார்.

எனவே மாணவரின் பெற்றோர், இதுதொடர்பாக மானாமதுரை மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, பிளஸ்-1 மாணவரை மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content