ஐரோப்பா

ரஷ்ய இரட்டை ஏவுகணை தாக்குதலில் 14 பேர் பலி : நாளை ஒடெசா பிராந்தியத்தில் துக்க தினமாக அறிவிப்பு

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என்று பிராந்திய தலைவர் ஒலெக் கைபர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலையடுத்து நாளை ஒடெசா பிராந்தியம் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஒளிபரப்பு நிறுவனமான சுஸ்பில்னே தெரிவித்துள்ளது.

மேலும் தாக்குதலில் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த இடம் மீண்டும் குறிவைக்கப்பட்டபோது ஆரம்ப தாக்குதலில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக முந்தைய தகவல்கள் சுட்டிக்காட்டின.

ஒடேசா மீதான இன்றைய தாக்குதல் “உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் தாமதம் இருக்கக்கூடாது” என்பதைக் காட்டுகிறது என்று உக்ரைன் நாடாளுமன்றத்தின் தலைவர் ருஸ்லான் ஸ்டீபன்சுக் கூறியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!