ஐரோப்பா செய்தி

பக்முட் பகுதியில் 30 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி : பிரித்தானிய இராணுவ ஆலோசகர் வெளியிட்ட தகவல்!

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாக்முட் பகுதியில் சுமார் 30 ஆயிரம் ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் மூத்த ஆலோசகர் மதிப்பிட்டுள்ளார்.

OSCE க்கு பிரிட்டனின் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக செயற்பட்டு வரும்  இயன் ஸ்டப்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது,  கிழக்கு உப்புச் சுரங்க நகரத்தின் கட்டுப்பாட்டைப் பெற ரஷ்யா போராடும் போது மிகவும் அதிக உயிரிழப்பு விகிதங்களைச் சந்தித்து வருவதாகக் கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல்  பாக்முட்டைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டும் 20-30 ஆயிரம் வாக்னர் மற்றும் வழக்கமான ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என அவர் கணித்துள்ளார்.

இது ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 800 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் வக்னர் கூலி படையனர் எனவும் கூறியுள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!