செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்

ஓஹியோ வீட்டில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவத்தை கொலை-தற்கொலை என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

யூனியன்டவுன் காவல் துறை ஒரு அறிக்கையில்,46 வயதான ஜேசன்,42 வயதான மெலிசா மற்றும் இவர்களது குழந்தைகள் 15 வயதான ரெனி,12 வயதான ஆம்பர் மற்றும் 9 வயது இவான் 15 மைல் தொலைவில் உள்ள லேக் டவுன்ஷிப்பில் உள்ள அவர்களது வீட்டில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்டார்க் கவுண்டி கரோனர் அலுவலகத்தின் தலைமை புலனாய்வாளர் ஹாரி கேம்ப்பெல் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தினார். துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

இந்த திடீர் மரணம் அக்கம் பக்கத்தினரையும், பள்ளி நிர்வாகிகளையும், குடும்பத்தினரை அறிந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் குடும்பம் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!