இலங்கை செய்தி

நாடுவானி உடைந்த விமானத்தின் கண்ணாடி!! கொழும்பில் அவசரமாக தரையிறக்கம்

டுபாய் நோக்கி பயணித்த இலங்கை விமானம் ஒன்று விமானத்தின் முன் கண்ணாடி வெடித்ததால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (08) காலை 9.30 மணியளவில் புறப்பட்டது.

எவ்வாறாயினும், கண்ணாடி வெடித்ததன் காரணமாக, சுமார் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 189 பயணிகள் மற்றும் 15 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் இன்று பிற்பகல் துபாய்க்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் இந்தியாவை அண்மித்து பயணித்துக்கொண்டிருந்த வேளையில், கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளமை அவதானித்த, விமானி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மாற்று விமானத்தின் ஊடாக பயணிகள் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!