உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்களின் பேரழிவு – மியூனிக் மாநாட்டில் செலென்ஸ்கி எச்சரிக்கை
உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்கள் ஏற்படுத்தும் பேரழிவு குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி( Volodymyr Zelenskyy) வெளிப்படுத்தியுள்ளார்.
“ரஷ்ய ஆக்கிரமிப்பினால் ஏற்படும் சவால்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் உங்கள் நாட்டின் நலன்களைப் பாதுகாக்க உலகின் ஆதரவைப் பெறும் போராட்டத்திற்கும் நீங்கள் தயாரா என்றும் Volodymyr Zelenskyy உலக தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ஜனவரி மாதத்தில் மட்டும் 6,000 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், மின்சார நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி
வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
அவற்றை சீரமைக்க போராடும் மீட்புப் பணியாளர்களை அவர் பாராட்டியுள்ளார்.





