இலங்கை செய்தி

நாட்டுக்காக எவருடனும் இணைய தயார் – பசில்

நாட்டின் நலனுக்காக யாருடனும் இணையவும் பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க நிறுத்துவாரா என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று (10) காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய தேர்தல் செயற்பாட்டு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜூன் 18 ஆம் திகதிக்குள் அறிவிக்கவுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பசில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 22 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!