பின்லாந்தில் விபத்தில் சிக்கிய இரண்டாம் உலகப்போர் கால விமானம்!
தெற்கு பின்லாந்தில் புறப்பட்ட சில நிமிடங்களில், இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தின் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் இரண்டு அனுபவம் வாய்ந்த விமானிகள் இறந்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஒற்றை எஞ்சின், இரண்டு இருக்கைகள் கொண்ட T-6 T-6 Texan விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
1930 களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரபலமான அமெரிக்க இராணுவ பயிற்சி விமானம் தற்போது விமானக் கண்காட்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ரேஸ்கலா விமானநிலையத்திற்கு அருகிலுள்ள காட்டில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக ஜெர்மன் பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனிக்கு சொந்தமான இந்த விமானம் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டு, ஜெர்மனிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு சோதனை ஓட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





