ஈரான்-இஸ்ரேல் மோதலால் எரிபொருள் பாற்றாக்குறை ஏற்படுமா? – இலங்கை அமைச்சர் விளக்கம்!

ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற சமூக ஊடகப் பதிவுகளை மக்கள் நம்பக்கூடாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (17) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நாட்டில் இரண்டரை மாதங்களுக்கு எரிபொருள் இருப்பு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
அடுத்த சில நாட்களில் நாட்டிற்கு மேலும் எரிபொருள் இருப்பு வர திட்டமிடப்பட்டுள்ளது என்றும், தேவைக்கேற்ப எரிபொருள் இருப்பு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் விளக்கினார்.
(Visited 2 times, 2 visits today)