யாழில் சர்வதேச மைதான கட்டுமான பணி கைவிடப்படுமா?
யாழ். மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடரும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறை முடியும்வரை கட்டுமான பணியை நிறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“ யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான கட்டுமான பணி நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒரு திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமெனில் சில அறிக்கைகள் தேவைப்படும். சகல அமைச்சுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும்.
மைதானம் அமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.





