இலங்கையில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு அறிமுகமாகும் WhatsApp இலக்கம்

இலங்கையில் முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789 88 89 என்ற வட்ஸ்-அப் இலக்கத்திற்குத் தகவல்களை வழங்கமுடியும்.
ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15 ஆம் திகதியினை உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, முதியோருக்கான தேசிய செயலகம் இந்த திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)