வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய காலநிலை – குழந்தைகள் உட்பட 15 பேர் பலி

அமெரிக்காவில் பல மாநிலங்களை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய நகரங்கள் கடுமையான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காயமடைந்த பலர் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டல்லாஸின் வடக்கே இருந்து ஆர்கன்சாஸின் வடமேற்கு மூலை வரையிலான பகுதியில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்திய புயலுக்கு முன்னதாக மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

அமெரிக்காவை பாதித்துள்ள இந்த காலநிலை காரணமாக பல வீடுகளும் இடிந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் வெளியூர் திருமணத்திற்கு வந்தவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!