ஆசியா

தைவானை சீனாவுடன் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் – அதிபர் லாய் சிங் டே

தைவானிய அதிபர் லாய் சிங் டே, சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் என்று சூளுரைத்துள்ளார்.

சுயாட்சியுடன் செயல்படும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்றும் அந்நாட்டை இணைத்துக் கொள்ள ராணுவப் பலத்தைக்கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீனா கூறியுள்ளது.அது மட்டுமல்லாமல் அப்போதைக்கு அப்போது ராணுவப் பலத்தைக் காட்டியும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியும் தைவானை அது மிரட்டி வருகிறது.இந்த நிலையில் தைவான் அதிபர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

“இணைப்பை எதிர்க்கும் கடப்பாட்டையும் எங்களுடைய இறையாண்மையில் நுழைவதையும் கடுமையாக எதிர்ப்போம்,” என்று லாய் குறிப்பிட்டார்.தைவானிய தேசிய தினத்தை முன்னிட்டு அதிபர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

லாய் மே மாதம் பதவியேற்றதிலிருந்து சீனா மேலும் நெருக்குதலை அளித்து வருகிறது.தைவான் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது சீனா ராணுவப் பயிற்சிகளை நடத்தலாம் என்று முன்னதாக அமெரிக்க நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார்.

தைவானின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் லாயை ‘பிரிவினைவாதி’ என்று பெய்ஜிங் குறிப்பிடுகிறது.முன்னைய அதிபர் டிசாய் இங்-வென்னைவிட சீனாவுக்கு எதிராக அவர் வெளிப்படையாக பேசி வருவதால் சீனா ஆத்திரமடைந்துள்ளது.

தைவானின் தாய்நாடு சீனா அல்ல என்று லாய் கூறியபோது “விரோதத்தையும் மோதலையும் அதிகரிக்கும் தீங்கை நோக்கமாகக் கொண்டது,” என்று லாய் மீது சீனா குற்றம்சாட்டியது.

அக்டோபர் 10 தைவானில் அதிபர் அலுவலத்திற்கு முன்பு நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் அந்நாட்டின் விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் சீறிப் பாய்ந்து சாகசங்களைக் காட்டின.

(Visited 41 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!