இலங்கை செய்தி

ரணில் அரசாங்கத்திற்கு நாம் ஆதரவளித்து வருகிறோம்!! மகிந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பற்றியோ, இன்னும் அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றியோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. ஒரு தரப்பினர் ரணிலுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் உள்ளனர்.

கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இது தொடர்பில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என மகிந்த ராஜபக்சவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் பொதுஜன பெரமுன ஆதரவளித்து வருகிறது.

எனவே, அவரைப் பற்றியோ, அரசைப் பற்றியோ எந்த கருத்தையும் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!