மெக்சிகோவில் தொடரும் வன்முறை : தேசிய காவல்படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவின் ஜலிஸ்கோ (Jalisco) மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் தேசிய காவல்படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சர் ஒமர் கார்சியா ஹார்ஃபுச் (Omar Garcia Harfuch) இன்று இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
“எல் மென்சோ” மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கும்பல் தலைவராக இருந்தார். அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களை தருபவர்களுக்கு $15 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து நகரம் முழுவதும் பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், வன்முறை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




