ஐரோப்பா

மனிதர்களுக்கும் தடுப்பூசி – உலகின் முதல் நாடாக பின்லாந்து எடுத்த நடவடிக்கை

உலகின் முதல் நாடாக பின்லாந்து அடுத்த வாரத்திலிருந்து சில ஊழியர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பாகக் கால்நடைகளுடன் தொடர்புடையவர்களுக்கு அத்தடுப்பூசி செலுத்தப்படும் என்று பின்லாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை மூலம் உலகில் மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியைப் பயன்படுத்தும் முதல் நாடாகப் பின்லாந்து மாறியுள்ளது.

இப்போதைக்குச் சுமார் 10,000 பேருக்குத் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அத்தடுப்பூசி போடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் காரணமாக அண்மை ஆண்டுகளில் உலகம் முழுதும் மில்லியன் கணக்கான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. மாடு உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் அது பரவுகிறது. சில சம்பவங்களில் மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பின்லந்தில் இதுவரை மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்றவில்லை. ஆனாலும் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்க அந்நாடு ஆர்வத்துடன் இருக்கிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content