ஈரான் நல்லெண்ணத்துடன் செயல்பட்டால், அமெரிக்கா அவர்களுக்குத் திறந்த கரங்களை நீட்டும்
அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. Vance, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஏர் ஃபோர்ஸ் டூ விமானத்தில் புறப்பட்டார்.
விமானத்தில் ஏறுவதற்கு முன், “பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஈரான் “நல்லெண்ணத்துடன்” செயல்பட்டால், அமெரிக்கா திறந்த மனதுடன் உதவத் தயாராக இருப்பதாகவும், ஏமாற்ற முயன்றால் அதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளுக்கான வழிகாட்டுதல்களை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சனிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த பேச்சுவார்த்தைகளில், சிறப்புத் தூதர் Steve Witkoff மற்றும் Jared Kushner ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதேவேளை, ஈரானிய தூதுக்குழுவின் வருகைக்காக இஸ்லாமாபாத் இன்னும் காத்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.





