உலகம் செய்தி

ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை விளைவு -அமெரிக்க பங்குச் சந்தை சரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இறுதி காலவகாசம் நெருங்கியுள்ள நிலையில், ஈரான் – வொஷிங்டன் இடையேயான போர்நிறுத்த நம்பிக்கை மங்கியதால், அமெரிக்க பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவடைந்துள்ளன.

S&P 500, Nasdaq Composite மற்றும் Dow Jones Industrial Average ஆகிய முக்கிய குறியீடுகள் அனைத்தும் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே கு
றைந்த நிலையில் காணப்பட்டன. பின்னரும் இவை மேலும் சரிவடைந்தன.

சந்தை திறந்த பின்னர் பெரும்பாலான துறைகள் இழப்பை சந்தித்தன. அதேவேளை, எரிசக்தி துறை மட்டும் உயர்வைக் கண்டது.

முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. Apple Inc. மற்றும் Tesla Inc. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தன. அதேவேளை Alphabet Inc. பங்கு மட்டும் சிறிய உயர்வைக் கண்டது.

இந்நிலையில், மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. West Texas Intermediate மற்றும் Brent crude விலைகள் உயர்வைக் கண்டுள்ளன.

மேலும், பிட்காயின் (Bitcoin) மதிப்பும் குறைந்துள்ளது.

போர் காரணமாக உலகளாவிய சந்தைகள் பதற்றத்தில் உள்ளதுடன், எரிசக்தி விலைகள் உயர்வும் பொருளாதாரத்துக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!