ஐரோப்பா

உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து உறுதி

உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக மேற்கத்திய தலைவர்களை சமீப நாட்களாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்து வருகிறார். தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பதற்காக, ஜெலென்ஸ்கி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார்.

இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டரில், எனது நண்பர் திரு ரிஷி சுனக்கைச் சந்தித்து, கணிசமான பேச்சுவார்த்தைகளை நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து அறிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பிற்கு உதவும் வகையிலும், போரின் போக்கை மாற்றும் முயற்சியாகவும், மேலும் நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இங்கிலாந்து வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)
See also  சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : மூவர் படுகாயம்!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content