ஆஸ்திரேலியா

மெல்பர்னில் காயமடைந்த கங்காருவுக்கு உதவும் முயற்சியில் இரு பெண்கள் விபத்தில் சிக்கி பலி

வாகனம் மோதி காயமடைந்த கங்காருவுக்கு உதவ முயற்சி செய்த இரண்டு பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

செம்பம்பர் 4ஆம் தேதி மெல்பர்னின் புறநகர்ப் பகுதியான கிரேய்கிபர்னில் உள்ள ஹுயும் நெடுஞ்சாலையில் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். மாலை ஏழு மணியளவில் வழியில் வாகனம் மோதி காயமடைந்த கங்காருவை அவர்கள் கண்டனர். இருவரும் காரை நிறுத்திவிட்டு அதற்கு உதவ முயன்றனர்.

ஆனால் அச்சமயத்தில் வேகமாக வந்த மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர், கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டார். அதன் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக அவர் வாகனத்தை வேகமாகத் திருப்பியபோது பெண்கள் மீது மோதிவிட்டது.

முப்பது வயதுகளில் இருந்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் இறந்தார்.

இருவரின் அடையாளம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. ஓட்டுநர் விசாரைணைக்கு ஒத்துழைத்து வருவதாக விக்டோரியா காவல்துறை உதவி ஆணையரான கிளென் வியர் கூறினார்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித