ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு பொலிஸார் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் பொரிபன்ஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு நேற்று காலை 10 பொலிஸார் விசாரணை நடத்த சென்றனர்.

பொரிபன்ஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு விசாரணைக்கு சென்றபோது அங்கிருந்த நபர் பொலிஸார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்தார்.

இதையடுத்து படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஏற்கனவே குற்ற வழக்கில் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!