இலங்கை

இலங்கையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் வெளிநாடொன்றில் உயிரிழப்பு!

தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகள் இத்தாலியின் ட்ரெபியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலிய ஊடக அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் ஜூலை 8 சனிக்கிழமை பிற்பகல், ரொண்டனேரா கடற்கரைக்கு அருகில் நடந்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 59 மற்றும் 28 வயதுடைய லெஸ்லி கிலாஸ்டர் திசேரா வர்ணகுலசூரிய மற்றும் துலாஜ் நிலஞ்சன் திசேரா வர்ணகுலசூரிய என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாலை 4.30 மணியளவில் இவர்கள் இருவரும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டபோது பாபியோவில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலோக்னாவில் இருந்து டைவர்ஸ் குழுவினர் “டிராகோ” தீயணைப்பு வீரர்களின் ஹெலிகாப்டருடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

வெளியான தகவலின்படி மகன் தான் முதலில் நீரில் மூழ்கியிருப்பார் அதே சமயம் தந்தை அவரை காப்பாற்ற முயற்சித்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக, இருவரும் நீரில் மூழ்கிவிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!