உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புட்டினுக்கு டிரம்ப் விதித்த இறுதி காலக்கெடு

உக்ரைன் போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 10 அல்லது 12 நாட்களுக்குள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் அமைதியை நோக்கி எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இனி காத்திருக்க எந்த காரணமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
இருப்பினும், இரண்டு வாரங்களுக்கு முன்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர 50 நாட்கள் அவகாசம் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
அவ்வாறு செய்யாவிட்டால், ரஷ்யா கடுமையான வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இருப்பினும், ஸ்காட்லாந்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒரு குறிப்பிட்ட திகதியை அறிவிப்பார் என்று வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் 100 சதவீதம் வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.