கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட ரயில் : தண்டவாளத்தை சீரமைப்பதில் இழுப்பறி!

கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயில் தடம் புரண்ட நிலையில், சேதமடைந்த தண்டவாளத்தை இன்று (27.09) சரிசெய்ய முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக 1000க்கும் மேற்பட்ட கான்கிரீட் ஸ்லீப்பர்கள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
சேதமடைந்த அனைத்து ஸ்லீப்பர்களையும் மாற்ற வேண்டும் என்றும், இதை ஒரே நாளில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது.
எனவே, கடலோரக் கோட்டத்தில் ஒரே ஒரு வழித்தடம் மட்டுமே இயக்கப்படுவதால் பணிகள் தாமதமாகும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)