ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் மூவர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு மூத்த கடற்படை அதிகாரிகள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சாதாரண பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், கடந்த செப்டம்பரில் நடந்த மற்றொரு ராணுவ விமான விபத்தில், அந்த மாகாணத்தைச் சேர்ந்த 6 உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!