இலங்கை செய்தி

யாருடனும் இணையும் பேச்சுக்கு இடமில்லை – சஜித் திட்டவட்டமாக அறிவிப்பு

எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டுச்சேர தயாராக இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கூறுகிறார்.

சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வேட்பாளர்கள் ரணில் அனுரா விற்கு எங்களுடன் ஒன்று சேரும் எண்ணங்கள் இருக்கலாம்.

ஆனால் எங்களுக்கு இல்லை தேர்தலில் வெல்லும் எங்களுக்கு எவருடனும் இணைந்து பயணிக்கும் எண்ணம் இல்லை.

வேண்டுமென்றால் அவர்கள் இருவரும் இணையட்டும் எங்கள் வெற்றியை மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

மக்களால் ஒதுக்கப்பட்ட திருடர்களின் கூட்டத்துடன் நாட்டை அழிவு பாதையில் இட்டு சென்ற கூட்டத்துடன் எங்களுக்கு இணைய வேண்டிய அவசியம் இல்லை.

நாங்கள் ஒரு தரப்புடன் இணைய போவதாக அவர்களே பணம் செலுத்தி விளம்பர செய்து போலி செய்திகளை தயாரித்து முகநூல்கள் ஊடகங்களில் பதிவிடுகின்றார்கள்.

இவற்றை பொது மக்கள் நம்ப வேண்டாம் நாங்கள் கூட்டு சேர்வது திருடர்களுடன் அல்ல.

எங்கள் ஒப்பந்தம் இந்த நாட்டின் 220 இலட்சம் மக்களுடன் மட்டுமே இருக்கும்.

நல்ல தலைவர்கள் கற்றவர்கள் அனுபவம் உள்ளவர்கள் அனைவரும் எங்கள் தரப்பிலே இருக்கின்றனர்.

நல்ல வேலை திட்டம், நல்ல சிந்தனைகள் எங்கள் தரப்பிலேயே இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content