இலங்கை

கொம்பனித்தெருவில் இரு அடுக்குமாடி குடுயிருப்பாளர்களிடையே சுவரால் ஏற்பட்ட அமைதியின்மை!

கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இன்று மதியம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

கொம்பனித்தெரு ரயில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், கொம்பனித்தெரு லேக்சைட் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் இடையில் மதில் சுவரொன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறினால் இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொம்பனித்தெரு லேக்சைட் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தங்களது நுழைவு வீதிக்கு குறுக்கே சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதனை தொடர்ந்து கொம்பனித்தெரு ரயில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், ரயில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், கடலோரப் வீதியில் செல்லும் ரயில் சிறிது நேரம் தடைபட்டது.

ஆனால், பொலிசார் சம்பவ இடத்தை வந்ததை அடுத்து நிலைமை சீரானது.பின்னர், இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு குழுக்கள் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!