உலகம் செய்தி

தாயை கொலைசெய்து, தலையை துண்டித்து விளையாடிய மகன்

74 வயது தாயின் கழுத்தை நெரித்ததற்காக நியூ ஜெர்சி பொலிசார் 46 வயதான ஜெஃப்ரி சார்ஜென்ட் என்பவரை கைது செய்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணியளவில் கொலையைச் செய்த பின்னர், ஜெஃப்ரி அவரே காவல்துறையின் அவசர எண்ணை அழைத்து கொலை குறித்து தெரிவித்தார்.

ஜெஃப்ரி தனது தாயை அலெக்ஸாண்ட்ரியாவைக் கொன்றதாகவும், தனக்கு இருமுனைக் கோளாறு இருப்பதாகவும் பொலிஸிடம் கூறினார்.

ஜெஃப்ரியும் அவரது தாயும் வசித்த ஓஷன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பிற்கு பொலிசார் வந்தபோது, ​​காட்சி அதிர்ச்சியாக இருந்தது. ஜெஃப்ரி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது தாயார் அலெக்ஸாண்ட்ரியாவின் உடலின் மேல் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்தார்.

காவல்துறையினரைப் பார்த்தவுடன், தனது தாயைக் கொன்றுவிட்டதாகவும், அதற்காக மிகவும் வருந்துவதாகவும் ஜெஃப்ரி கதறி அழுதார். ஜெஃப்ரியின் தாயைக் கொல்லப் பயன்படுத்திய கத்தியை பொலிஸார் வீட்டில் இருந்து மீட்டனர்.

மேலும் அவரது தாயார் அலெக்ஸாண்டிரியாவின் தலை, அவரது உடலிலிருந்து பிரிந்து கிடந்ததை, பக்கத்து அறையில் இருந்து பொலிசார் கண்டுபிடித்தனர்.

குடியிருப்பில் இருந்த பாதுகாப்பு கேமராவில் இருந்து கொலை நடந்த காட்சிகளை பொலிசார் மீட்டனர்.

பொலிஸாரின் அறிக்கையின்படி, கொலையின் பின்னர், தாயின் தலையை தூக்கி எறிந்து விளையாடியதாகவும், பொலிசார் வந்ததும், அவர் ஓடிச்சென்று சடலத்தின் மீது கிடந்தது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஜெஃப்ரி மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். ஜெஃப்ரி இருமுனைக் கோளாறு உள்ளவர் என்பதால் கைது செய்யப்பட்ட பிறகு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content