உலகம்

ஜப்பான் அரசாங்கத்திற்கு 21 கிலோ தங்கக் கட்டிகளை பரிசளித்த நபர்!

ஜப்பானில் உள்ள ஒசாகாவின் நகராட்சி நீர்வழிப் பணியகத்திற்கு £2.7 மில்லியன் மதிப்புள்ள 21 கிலோ தங்கக் கட்டிகளை பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் முழுவதும் பல நகரங்களைப் பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கவலையான கழிவுநீர் பராமரிப்பை சிறந்த முறையில் மேற்கொள்ள இந்த பணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒசாகாவில், கடந்த 2024 நிதியாண்டில் சுமார் 90 நீர் குழாய் கசிவுகள் இனங்காணப்பட்டன. இருப்பினும் வரவு செலவு திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையால் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 20% க்கும் மேற்பட்ட குழாய்கள் 40 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருப்பதாகவும், அவை பழுதடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!