இலங்கை

வங்காள தேசத்தில் நீடித்துவரும் போராட்டம் : பொலிஸ் அதிகாரி உயிரழப்பு!

காபந்து அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தக் கோரி வங்காளதேச எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில்  பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் சமீபத்தில் போராட்டங்களை தொடங்கின.

அதன்படி இன்று (29.10) இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை பிரயோகித்ததன் காரணமாக மோதல் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!