செய்தி விளையாட்டு

நடப்பு IPL தொடர் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம்

இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

இதனால் தரம்சாலாவில் நேற்றிரவு நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் மேலும் மேலும் மோசமடைந்து வருவதால் ஐபிஎல் போட்டியில் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இன்று காலை பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒருவார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐபிஎல் தொடர் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சஸ்பெண்ட் ஒரு வார காலத்திற்கு இருக்கும்.

அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய போட்டி அட்டவணை மற்றும் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!