இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்தது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். .

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவிலிருந்து 501,097 சுற்றுலாப் பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 139,355 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

அத்துடன்  ரஷ்யாவிலிருந்து 171,099 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 200,939 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 101,012 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவிலிருந்து 127,553 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 104,802 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 115,616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!