ஆசியா

ஆஸ்திரேலிய பிரஜையின் பையிற்குள் இருந்த மர்ம பொருள் : சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி!

சுற்றுலாத் தீவான பாலியில் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக ஆஸ்திரேலியர் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஆறு மாத மருத்துவ மறுவாழ்வுத் தண்டனை விதித்தது.

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள போர்ட் லிங்கனைச் சேர்ந்த ட்ராய் ஆண்ட்ரூ ஸ்மித் என்பவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சுற்றுலாத் தலமான லீஜியனில் உள்ள அவரது ஹோட்டலைச் சோதனை செய்த பின்னர், அவரது அறையில் இருந்து பற்பசை கொள்கலனுக்குள் 3.15 கிராம் (0.1 அவுன்ஸ்) படிக மெத்தம்பேட்டமைனை கைப்பற்றிய பின்னர் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

இந்தோனேசியாவின் கடுமையான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 55 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்