உலகம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்து G7 நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தி!

இஸ்ரேல் மீதான ஈரானின் வார இறுதித் தாக்குதல், மத்திய கிழக்கின் ஸ்திரமின்மையை நோக்கிய மேலும் ஒரு படியைக் குறிக்கிறது என்றும்  கட்டுப்படுத்த முடியாத பிராந்திய விரிவாக்கத்தை  தூண்டும் அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளகது.

கனடா மற்றும் பிற G7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ மாநாட்ல்  இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை குறிவைக்கும் ஈரானின் முடிவை  நேரடியான மற்றும் முன்னோடியில்லாத தாக்குதல்  என்று ஏழு மேம்பட்ட ஜனநாயகக் குழுவின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல், நேச நாடுகளின் உதவியுடன், தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது.

“இஸ்ரேல் மற்றும் அதன் மக்களுக்கு நாங்கள் எங்கள் முழு ஒற்றுமையையும் ஆதரவையும் தெரிவிக்கிறோம் மற்றும் அதன் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட G7 தலைவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணர்வில், ஈரானும் அதன் பினாமிகளும் தங்கள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம், மேலும் ஸ்திரமின்மையை மேலும் சீர்குலைக்கும் முன்முயற்சிகளுக்கு விடையிறுக்கும் வகையில் இப்போது மேலும் நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!