இலங்கை செய்தி

இலங்கை வருகின்றார் ஈரானிய அரச தலைவர்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, உமா ஓயா பல்நோக்கு திட்டத்தையும், 25 கிலோமீட்டர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையையும் திறந்து வைக்க உள்ளார்.

அதன்படி, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஏப்ரல் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இத்திட்டத்தில் 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு முக்கிய நீர்மின் நிலையங்களும் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகச் சிறந்த தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

5000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்தை மேம்படுத்தவும், 145 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை மாற்றவும், ஒரு வருடத்தில் 290 GW/h மின்சாரம் உற்பத்தி செய்யவும் இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

(Visited 29 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!