இலங்கை செய்தி

விளையாட்டாக ஆசனவாய் ஊடாக காற்று நிரப்பிய சம்பவம்!! குடல் வெடித்து உயிரிழந்த இளைஞன்

இளைஞர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளார்.

மாபிம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பழுது நீக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி பிற்பகல் குறித்த நிறுவன ஊழியர்கள் இருவர் விளையாட்டாக குறித்த நபரின் ஆசனவாயில் காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியுள்ளனர்

இதில் குடல் வெடித்து படுகாயமடைந்த அவர ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content