உலகம் செய்தி

போரால் 9 விமானங்களை இழந்துள்ள அமெரிக்கா!

ஈரான்மீதான போர் நடவடிக்கை ஆரம்பமானது முதல் போர் விமானம் உட்பட 9 விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் விமானம், எரிபொருள் நிரப்பு விமானம், போக்குவரத்து விமானம் என்பனவே இதுவரை இழக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி குறித்த போர் ஆரம்பமானது. இன்று 40 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீதான போர் நடவடிக்கையின்போது வான்வழி தாக்குதலே பெருமளவில் நடத்தப்பட்டுவருகின்றன.

ஈரானின் தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தவறான இலக்குத் தாக்குதல்கள் காரணமாகவே போர் விமானங்கள் அனர்த்தங்களுக்கு இலக்காகியுள்ளன எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக அமெரிக்காவின் போர் விமானங்கள் இரண்டை ஈரான் வீழ்த்தியுள்ளமை அமெரிக்காவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

அதேவேளை, ஈரானில் சிக்கிய விமானப்படை அதிகாரிகளை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கைக்கு சென்றவேளை இரு விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது.

எதிரி நாட்டிடம் சிக்காமல் இருப்பதற்காக மேற்படி இரு விமானங்களையும் ஈரானுக்குள்ளேயே வைத்து அமெரிக்க படைகள் அழித்துவிட்டு சென்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!