இந்தியா

பீகாரில் பயங்கரம்… 500 ரூபாய் பணத்திற்காக கண்களைத் தோண்டி தொழிலாளி கொடூரக் கொலை!!

பீகாரில் 500 ரூபாய் தொடர்பான தகராறில் 20வயது தொழிலாளியை அவரது நண்பர்கள் கண்களைத் தோண்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், ஆராவைச் சேர்ந்தவர் அரலோ மோகன் சிங்(20). தொழிலாளியான இவர் பராபசந்த்பூர் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், சன்வாரி பாலம் அருகே உள்ள வயலில் அரலோ மோகன் சிங் நேற்று உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார்,அரலோ மோகன் சிங் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அரலோ மோகன் சிங் கண்கள் இரண்டும் தோண்டப்பட்டிருந்தன. அத்துடன் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டும், குத்தப்பட்ட காயங்களும் இருந்தன. இதனால் மோகன் சிங் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில், இக்கொலை தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. வீடியோவில், அரலோ மோகன் சிங் கூர்மையான கருவிகளால் தாக்கப்படுகிறார். பின்னர் அவரின் கண்களைப் பிடுங்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது

Teen ripped out relative's eyes with his bare hands, police say

இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது மோகன் சிங்கின் சகோதரர் ராதா சிங்கிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது, உள்ளூரைச் சேர்ந்த அஜய் மஹாதோ, மோகன் சிங்கிற்கு 500 ரூபாய் கூலி தரவேண்டியிருந்துள்ளது. அந்த பணத்தை மோகன் சிங் கேட்டுள்ளார். ஆனால், அஜய் மஹாதோ தரமறுத்துள்ளார்.இதனால் அவரது தூண்டுதலால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று ராதா சிங் சந்தேகம் தெரிவித்தார். அத்துடன் மஹதோ உத்தரவின் பேரில் விருந்துக்காக தனது அண்ணனை அழைத்த நண்பர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை வீசிவிட்டனர் என்றும் கூறினார்.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். தொழிலாளியின் கண்களைத் தோண்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content