இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

  • February 7, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணைக்காக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. எனினும், வழக்கு விசாரணைக்காக […]

இலங்கை செய்தி

விலைபோகாத தலைவரே மாவை: திருவுருவச் சிலையை திறந்து வைத்து ஆளுநர் உரை!  

  • January 31, 2026
  • 0 Comments

“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா Mavai.C.Senathirasa பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர்.” இவ்வாறு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் N.Vedhanayagan புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் எனவும் அவர் கூறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அவரது உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி திருவுருவச் சிலை வடக்கு மாகாண […]

இலங்கை செய்தி

சிரேஷ்ட தலைவர் மாவையின் உருவச்சிலை இன்று திறப்பு!

  • January 31, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK சிரேஷ்ட தலைவர் அமரர் மாவை சேனாதிராஜாவின் Mavai Senathiraja நினைவுச்சிலை இன்று (31) திறக்கப்படுகின்றது. யாழ். மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் சா.செ.இளங்கோவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நினைவுப் […]

இலங்கை செய்தி

தேசிய வைத்தியசாலையாகிறது யாழ். மருத்துவமனை!

  • January 29, 2026
  • 0 Comments

“ தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன், விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும்.” இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க Dr. Anil Jasinghe தெரிவித்தார். சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க Nihal Abeysinghe தலைமையில் கூடியது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தின்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு […]

அரசியல் இலங்கை செய்தி

“எங்களுக்கு புக்க வேண்டாம்: அந்த செம்மறிக்கு கதைக்க தெரியவில்லை” – சபையில் அர்ச்சுனா!

  • January 20, 2026
  • 0 Comments

அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களையே யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி. அரசாங்கம் வைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archuna குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “உணவு, உடை, உறையுள் என்பனவே அடிப்படை தேவைகள் என்பது தரம் ஒன்று மாணவருக்குகூட தெரியும். ஆனால் உணவு, உறையுள், வீடு என ஜனாதிபதியின் மேடையில் இருந்துகொண்டு செம்மறியொன்று கூறுகின்றது. இப்படியான செம்மறிகளையே யாழ்.மாவட்ட எம்.பிக்களாக என்.பி.பி. அரசாங்கம் […]

இலங்கை செய்தி

பொங்கு தமிழ் பிரகடனம்: 25 ஆவது நினைவேந்தல் யாழ். பல்கலையில்!

  • January 17, 2026
  • 0 Comments

யாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று சனிக்கிழமை(17) நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி நினைவு கூர்ந்திருந்தனர். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக வெளியிடப்பட்டது. 2001 ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி பொங்கு தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் இலங்கை செய்தி

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: யாழில் ஜனாதிபதி சபதம்!

  • January 16, 2026
  • 0 Comments

நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கமாட்டோம். இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார். “ போரின்போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை. போர் காலத்திலும் இடம்பெயர்ந்து வாழ்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும். எனவே, போரால் இடம்பெயர்ந்த […]

செய்தி

அழகு தமிழ் பேசிய அநுர: சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்த காணொளி!

  • January 16, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake யாழ்.மண்ணில் நடை பயிற்சியில் ஈடுபடும் காணொளி வைரலாகியுள்ளது. தனக்கு காலை வணக்கம் சொன்ன இளைஞர் ஒருவருக்கு ஜனாதிபதி தமிழில் பதில் அளிப்பதும் பலரது பாராட்டடை பெற்றுள்ளது. தைப்பொங்கல் நிகழ்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு Jaffna பயணம் மேற்கொண்டுள்ளார். பொங்கல் நிகழ்வுகளில் நேற்று பங்கேற்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி நடை பயிற்சியில் ஈடுபட்டார். அவரை சூழ […]

இலங்கை செய்தி

பொங்கல் விழாவில் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

  • January 15, 2026
  • 0 Comments

  எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமாக தைப்பொங்கல் தினத்தில் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் […]

செய்தி

தமிழர் பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதிக்கு வரவேற்பு!

  • January 15, 2026
  • 0 Comments

வடமாகாண ‘பொங்கல் விழா’ இன்று யாழ். வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்தார். இதன்போது வரவேற்புரை நிகழ்த்திய வடக்கு மாகாண ஆளுநர், நாட்டின் தலைவர் எம்முடன் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாடுவது எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது என குறிப்பிட்டார். சாதாரண மக்களின் வலிகளை […]

error: Content is protected !!