செய்தி

உரிய திசையில் பயணிக்கும் இலங்கைப் பொருளாதாரம்: IMF பாராட்டு!

  • January 28, 2026
  • 0 Comments

டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் IMF குழு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று 28) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த IMF பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டனர். அனத்தங்களினால் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா உதவும்: தூதுவர் உறுதி!

  • January 23, 2026
  • 0 Comments

“ டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும்.” இவ்வாறு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் Qi Zhenhong உறுதியளித்துள்ளார். கண்டிக்கு நேற்று (23) பயணம் மேற்கொண்ட சீனத் தூதுவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். “ இலங்கையும், சீனாவும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும். எனவே, இலங்கைக்கு உதவி வேண்டியது சீனாவின் கடமையாகும். இலங்கையில் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி: கணக்காய்வு குறித்து ஆராய்வு!

  • January 22, 2026
  • 0 Comments

வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) எட்டாவது கூட்டம் நேற்று (21) நடைபெற்றது. பாதுகாப்பு பிரதித் அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண் ஜயசேகர தலைமையில் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிவாரண உதவிகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்த தயார்நிலை மற்றும் நிவாரணப் பொருட்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 22 […]

இலங்கை செய்தி

இன்று இலங்கை வருகிறது IMF குழு!

  • January 22, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் IMF பிரதநிதிகள் குழு இன்று (22) இலங்கை வரவுள்ளது. டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர் என தெரியவருகின்றது. பேரிடரால் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. இலங்கைக்கான அடுத்தக்கட்ட கடன் உதவி பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதிவரை இக்குழு இலங்கையில் தங்கி இருக்கும்.

இலங்கை செய்தி

டித்வா புயல் குறித்து சபையில் இன்று விவாதம்!

  • January 21, 2026
  • 0 Comments

டித்வா ditwah புயல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது. டித்வா புயலை எதிர்கொள்வதற்கு முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரப்பட்டது. அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் மேற்படி குழு நாடாளுமன்றத்துக்கு பிரேரிக்க வேண்டும். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தில் “டித்வா புயல்”!

  • January 16, 2026
  • 0 Comments

டித்வா புயல் சம்பந்தமாக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது. டித்வா புயல் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும், உரிய முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எங்கே தவறு நடந்துள்ளது, பொறுப்பு கூற வேண்டியது யார் என்பது தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்நிலையில் தெரிவுக்குழு அமைப்பதற்குரிய யோசனை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழுவதற்கு வழிகாட்டும் ஐ.நா.!

  • January 14, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தில் நேற்று (14) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. டித்வா சூறாவளியின் தாக்கங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளன. அனர்த்தத்திற்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான விரிவான விளக்கத்தை ஐ.நா. UNDP அதிகாரிகள் […]

இலங்கை செய்தி

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

  • January 12, 2026
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இந்;நிலைமையக் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் முதல் 12 நாட்களுக்குள் 2 ஆயிரத்து 17 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 41 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

உயிரைத்தவிர இழந்த ஏனைய அனைத்தையும் வழங்குவோம்: ஜனாதிபதி!

  • January 9, 2026
  • 0 Comments

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த மக்களை 2048 வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை […]

இலங்கை செய்தி

பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு வீடு அமைக்கும் பணி நாளை ஆரம்பம்!

  • January 8, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகின்றது. ரீ பில்டிங் ஸ்ரீலங்கா ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். இதற்கமைய டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு […]

error: Content is protected !!