அரசியல் இலங்கை செய்தி

அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ள “நம்பிக்கையில்லாப் பிரேரணை”!

  • January 27, 2026
  • 0 Comments

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ முதலில் பிரதமருக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

இனவாத அரசியல் குறித்து பொன்சேகா எச்சரிக்கை!

  • January 27, 2026
  • 0 Comments

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.இது தொடர்பில் மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். “ பௌத்த மதமே இந்நாட்டில் பிரதான மதம் என்ற கருத்தில் மாற்று கருத்து கிடையாது. நானும் சிங்கள பௌத்தன்தான்.பௌத்த மதத்தை பாதுகாத்து வந்துள்ளோம். எனினும், சில அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமது நலனுக்காகவே அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். இது தொடர்பில் மக்கள், மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கைவிடுமாறு வலியுறுத்து!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயாத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்ணி Democratic Tamil National Alliance வலியுறுத்தியுள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh K. Premachandran இது தொடர்பான வலியுறுத்தலை இன்று (26) விடுத்துள்ளார். இது தொடர்பில் அவரால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு , ” கிவுல் ஓயா என்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டத்துக்கான […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்த ஆட்சியில் மௌனம்: எம்.பி.பி. ஆட்சியில் சீற்றம்! தமிழ்க் கட்சிகளுக்கு அமைச்சர் சாட்டையடி!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான என அவர் தெரிவித்துள்ளார். கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம் என அமைச்சர் […]

அரசியல் இலங்கை செய்தி

சாணக்கியன் இனவாதி: அக்மீமன தேரர் குற்றச்சாட்டு!

  • January 24, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இனவாதியென முத்திரைக் குத்தியுள்ளார் லங்கா மக்கள் கட்சி தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் Akmeemana Dayarathana Thero. கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு முத்திரை குத்தினார். யாழில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு தென்னிலங்கையில் கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும், ஜனாதிபதியின் மேற்படி உரையை நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. நேற்று வரவேற்றார். […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகள் அன்று வன்னியில் செய்ததை இன்று தெற்கில் செய்ய முற்படுகிறது ஜே.வி.பி.: சம்பிக்க குற்றச்சாட்டு

  • January 24, 2026
  • 0 Comments

“வன்னியில் புலிகள் அமைப்பு அன்று செய்ததுபோல இங்கு ஜே.வி.பி. JVP பொலிஸ், ஜே.வி.பி. இராணுவம், ஜே.வி.பி. நீதிமன்றம் என்பவற்றை உருவாக்குவதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க Champika Ranawaka குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ சட்டமா அதிபர்கள் சிலர் கடந்த காலங்களில் பக்கச்சார்பாக செயல்பட்ட நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய சட்டமா அதிபர் சட்டத்தின் பிரகாரம் செயல்படுகின்றார். தனிக்கட்சி அரசொன்றை நோக்கியே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. தமக்கே உரித்தான […]

இந்தியா தமிழ்நாடு

விஜய்க்கு பா.ஜ.க. வலை: ஜனநாயகனை வைத்து வியூகம்?

  • January 24, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜயை பா.ஜ.க. BJP தலைமையிலான கூட்டணியில் இணைப்பதற்கு வலை வீசப்பட்டுள்ளது என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். “ஜனநாயகன்” திரைப்படத்தை முடக்கும் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ஜனநாயகன்” படத்துக்கு பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். எனினும், இது விடயத்தில் அவர் மௌனித்து இருக்கிறார். எனவே, […]

இலங்கை செய்தி

டித்வா புயல் குறித்து சபையில் இன்று விவாதம்!

  • January 21, 2026
  • 0 Comments

டித்வா ditwah புயல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது. டித்வா புயலை எதிர்கொள்வதற்கு முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரப்பட்டது. அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் மேற்படி குழு நாடாளுமன்றத்துக்கு பிரேரிக்க வேண்டும். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

“எங்களுக்கு புக்க வேண்டாம்: அந்த செம்மறிக்கு கதைக்க தெரியவில்லை” – சபையில் அர்ச்சுனா!

  • January 20, 2026
  • 0 Comments

அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களையே யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி. அரசாங்கம் வைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archuna குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “உணவு, உடை, உறையுள் என்பனவே அடிப்படை தேவைகள் என்பது தரம் ஒன்று மாணவருக்குகூட தெரியும். ஆனால் உணவு, உறையுள், வீடு என ஜனாதிபதியின் மேடையில் இருந்துகொண்டு செம்மறியொன்று கூறுகின்றது. இப்படியான செம்மறிகளையே யாழ்.மாவட்ட எம்.பிக்களாக என்.பி.பி. அரசாங்கம் […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள்: தகவல் உண்மையா?

  • January 13, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற செயலகத்தால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. “ நாடாளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்” – என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தே இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும், அவ்வாறான ஆலோசனைகளையும் சபாநாயகர் வழங்கி இருக்கவில்லை எனவும் […]

error: Content is protected !!